Thursday, September 22, 2011

தேவதை உலகில் .

இடுப்பினில்  கைவைத்து அழகாய் முறைக்கிறாள் ......அவள்
தூக்கி எறிந்த மை தீர்ந்த எழுதுகோலை,
தேடித்தரவில்லை என்பதாய் குற்றச்சாட்டு.
தோப்புக்கரணங்கள், பாசாங்கு வார்த்தைகள்
எல்லாம் தோற்றுப் போகின்றன ...
இருபது டெசிபலில் துவங்கும் அழுகை
நூற்றி இருபதைத்  தாண்டி செல்கிறது ....
கை கால்களின் தாள லயத்துடன் ....
எடுத்து வரும் ஏனையவை  நிராகரிக்கப்படுகிறது
டோரா பூச்சி, பவர் ரேன்ஞர்  , சூப்பர் மேன்
எதற்கும் மசியவில்லை அவள்..
என்ன செய்வதென விழி பிதுங்கும் வேளையில் ..
பதறி எழுந்து  ' ஹோம் வொர்க் ' செய்யனும்
என குதித்தோடுகிறாள் குட்டி தேவதை .......

No comments:

Post a Comment