அலாரம் மறந்த காலைப்பொழுதுகள்
எப்போதும் கண்டிடா ஞாயிற்றின் ஞாயிறு .....
மனதிற்குகந்த
பாடல்களின் பின்னணியில்
தொடர்ந்திடும் ....
பிரியாத
தலையணையும் , கலையாத தூக்கமும்
அம்மாவின் அசைவச்
சமையல் வாசனைகள் ,
தொலைக்கட்சியில்
தொலைகின்றன கடிகார சப்தங்கள் ,
குழந்தைகளுடன் குழந்தையாய் மாறிப் போகிறோம் .
கலகலத்திடும் வீடு எதிர்பாராத உறவுகளின் வருகையில்.....
உதவி செய்வதான
சமையலறை 'அத்துமீறல்கள்'
மாலையை
விழுங்குகிறது ஒரு திரைப்படமோ , கடற்கரையோ ...
இரவு உணவு கட்டாயமாய் ஒரு விடுதியில் ஒவ்வொருவர் வீட்டிலும் .....
அயர்ச்சியுடன்
படுக்கையில் விழுந்து ,அலாரத்தை
திருகி வைக்கையில்
மனம் ஏங்குகிறது இன்னொரு ஞாயிற்றின் விடியலுக்காய் !!!!!!!!

No comments:
Post a Comment