பொரை ஏறிடும் தருவாயில்
வந்து விழும் வார்த்தைகள் ..
அன்புக்குரியவர்கள் யாரும்
நினைத்திருக்கலாம் என்பதாக ....
நீதான்....என்பது தெரியுமாதலால்
துடைத்துக் கொள்கிறேன் தண்ணீரை
கடைவாய் உதிக்கிற புன்னகையும் சேர்த்து !!!..
எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, December 25, 2011
Thursday, December 22, 2011
பா(ர்)வை
Monday, December 19, 2011
நறுமுகை ...
எனது விழித்திரை நிறைத்திடும்
உனது பிம்பங்களில்
நான் உள் நுழைகையில்
நெற்றி நெரித்து
இமை விரித்து,
இதழ் பிரித்து,
மெல்லிய புன் முறுவலுடன் .
அளித்துச் செல்கிறாய் - ஒரு
சிவப்புக் கம்பள வரவேற்பை ....
உனது பிம்பங்களில்
நான் உள் நுழைகையில்
நெற்றி நெரித்து
இமை விரித்து,
இதழ் பிரித்து,
மெல்லிய புன் முறுவலுடன் .
அளித்துச் செல்கிறாய் - ஒரு
சிவப்புக் கம்பள வரவேற்பை ....
Sunday, December 11, 2011
துரத்திடும் விரல்கள்
ஆளரவமற்ற பின்னிரவு வேளைகளில்
திரையங்கின் மெல்லிய இருளில்,
தொலை தூரப் பேருந்தின் பின்னிருக்கைகளில்,
துரத்தியபடியே இருக்கின்றன சில விரல்கள்
துரியோதனன் பிளந்த இடத்தில் தாளமிடும் அவை
மெல்ல உள்நுழையும்
கொடிய தருணங்களில்
திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன்
தட தடக்கத் துவங்கிய இதயம்
இன்னும் வேகமாய் துடிதுடிக்கிறது .
உற்று நோக்கிடும் முகங்களும்,
நீல நாகம் குறித்த புறங்கையும்,
ஒற்றை கடுக்கன் தரித்த காதும்,
உயிர் கொண்ட உறவுகளும் அத்து மீறும்
நீள் நகம் கொண்ட இரவுகளும்,
நரகமாக்கும் வாழ்வை - கடந்து போகையில்
மடியமர்த்தப்படும் கைப்பை கொண்டு
கடந்து விடுகிறேன் -பேருந்துப் பயணங்களை..!
திடகாத்திர நண்பர்கள் துணையுடனே
சமாளிக்கிறேன்- திரையரங்க தருணங்களை!
சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிறேன்
இரவுகளின் வெளித் தங்கலை..!.
நிசப்தம் கிழித்து தடதடக்கிற
தொடர் வண்டியின் இரவுப் பயணங்களில்,
உறங்கும் வழிதான் புரிபடவில்லை !!!
திரையங்கின் மெல்லிய இருளில்,
தொலை தூரப் பேருந்தின் பின்னிருக்கைகளில்,
துரத்தியபடியே இருக்கின்றன சில விரல்கள்
துரியோதனன் பிளந்த இடத்தில் தாளமிடும் அவை
மெல்ல உள்நுழையும்
கொடிய தருணங்களில்
திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன்
தட தடக்கத் துவங்கிய இதயம்
இன்னும் வேகமாய் துடிதுடிக்கிறது .
உற்று நோக்கிடும் முகங்களும்,
நீல நாகம் குறித்த புறங்கையும்,
ஒற்றை கடுக்கன் தரித்த காதும்,
உயிர் கொண்ட உறவுகளும் அத்து மீறும்
நீள் நகம் கொண்ட இரவுகளும்,
நரகமாக்கும் வாழ்வை - கடந்து போகையில்
மடியமர்த்தப்படும் கைப்பை கொண்டு
கடந்து விடுகிறேன் -பேருந்துப் பயணங்களை..!
திடகாத்திர நண்பர்கள் துணையுடனே
சமாளிக்கிறேன்- திரையரங்க தருணங்களை!
சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிறேன்
இரவுகளின் வெளித் தங்கலை..!.
நிசப்தம் கிழித்து தடதடக்கிற
தொடர் வண்டியின் இரவுப் பயணங்களில்,
உறங்கும் வழிதான் புரிபடவில்லை !!!
'நிலை'ப்"பாடு"
உன்னை அழ வைத்திடலாம்.
மெல்லிய இதயம் சிதைந்திடலாம் ..
புன்னைகைப் பூக்கள் உதிர்ந்து போகலாம் ...
உயிரின் நீளம் குறைந்து போகலாம் ....
என்றே என் காதலை மறைத்து வைக்கிறேன்
உயிரின் ஆழத்தில் புதைத்து வைக்கிறேன்
உன் நினைவை மறக்க மட்டும்
மறந்து போகிறேன் -தினமும்
இறந்து பிறக்கிறேன்.
மெல்லிய இதயம் சிதைந்திடலாம் ..
புன்னைகைப் பூக்கள் உதிர்ந்து போகலாம் ...
உயிரின் நீளம் குறைந்து போகலாம் ....
என்றே என் காதலை மறைத்து வைக்கிறேன்
உயிரின் ஆழத்தில் புதைத்து வைக்கிறேன்
உன் நினைவை மறக்க மட்டும்
மறந்து போகிறேன் -தினமும்
இறந்து பிறக்கிறேன்.
Wednesday, December 7, 2011
புதிர்...
நீ ஒரு புரியாத புதிர் -என்று சொன்னார்கள்
புரிந்து கொள்ளவே இயலாத
புதிரொன்றும் இல்லை - என்று எண்ணி ,
உன்னைப் புரிந்து கொள்ள முயல்கையில்
தெளிவாய்ப் புரிந்தது எனக்கு
நீ புரியாத புதிரொன்றும் இல்லை ..- யாரும்
புரிந்து கொள்வதை விரும்பாத புதிரென்று ...
யாருக்குமே விளங்காத புதிர் உன்னை
நான் மட்டும் புரிந்து கொள்ள முயற்சிக்கும்
புதிர்தான் விளங்கவில்லை இன்னும் ....
Subscribe to:
Posts (Atom)