Monday, August 13, 2012

கானல் நீர் கானகம்..

தனிமை நிரம்பி வழியும்
நீள் இரவும்,
சூறைக் காற்றும்
கிழித்துப் போட்ட
கானகத்தின் கடைசி இலையாய் ...யான்

'இருக்கிறேன்' என்பதா?
என்பதெனில்
நிகழ்காலமா ?  'இறந்த' காலமா ?
பொய்த்துப் போய்விடும் காலக் கணிதம்
உடைந்திடும் கணத்தில் விடுதலை எமக்கு ..

உதிர்ந்தவை உலர்ந்து போக
பறந்தவை மறைந்து போக
சிறந்தவை    சிதைந்து     போக
எம் விதி என் செய்யும் அறிகிலேன்...

காயப்படும் காம்புகள் என்றெண்ணி  இருப்பதா?
சருகளோடு சருகாய்க் கருகுவதா.
இலையுதிர்க்  காலமே..
இறுதியாய் ஒன்று..
பிய்த்தெறியும் எமை
வலிக்காமல்..
காம்புகள் கண்ணீர் சிந்தாமல்