நித்தமும் காவல் காக்கும் அவனுக்கு
நிச்சயமாய்த் தெரியாது
அவன் செய்யும் வேலையும்,
அதற்கான மகத்துவமும்.
பயிர்கள்தாம் சொல்லின
'நீ எங்கள் கடவுள்' என்றும்
'மண்ணில் வந்த தேவனென்றும்
மௌனமாய் புன்னகைத்து கொள்வான் அவன்.
'மண்ணில் வந்த தேவனென்றும்
மௌனமாய் புன்னகைத்து கொள்வான் அவன்.
தாவிக் கடிக்கும் ஆடுகளை,
கண்ணமிடும் எலியினை,
குழி பறிக்கும் காட்டுப் பன்றிகளை
இயன்ற வரை எதிர் நின்றான்.
குழி பறிக்கும் காட்டுப் பன்றிகளை
இயன்ற வரை எதிர் நின்றான்.
சுட்டெரிக்கும் சூரியனோ,
சுழன்றடிக்கும் சூறாவளியோ,
சோவென்ற பெருமழையோ,
சொல்லாமல் வந்த கடுங்குளிரோ,
பறித்துப் போனதந்த பயிர்களின் உயிரை
"எம் உடன்பிறப்புகள் உடைந்து போனதற்கும்
மரித்துப் போவதற்கும்
நீதான் பொறுப்பு,
அலட்சியம் உன் இருப்பு '
சோவென்ற பெருமழையோ,
சொல்லாமல் வந்த கடுங்குளிரோ,
பறித்துப் போனதந்த பயிர்களின் உயிரை
"எம் உடன்பிறப்புகள் உடைந்து போனதற்கும்
மரித்துப் போவதற்கும்
நீதான் பொறுப்பு,
அலட்சியம் உன் இருப்பு '
பதில் கூறும் அவகாசம் இன்றியும்,
அவன் கழுத்தை நெறித்தன
தவறிப் பிழைத்த சில செடிகள்.
"முட்டாள் பிள்ளைகளே,
நான் இல்லாவிடில் - இல்லை நீங்கள், நீடு வாழிய நீவிர் "
காவலன் சரிந்தான் கண்ணீரோடு!.
செடிகள் சிரித்தன செண்ணீரோடு!