Monday, September 22, 2014

குறுஞ்செய்தி


மறை பொருளும்
மீள்பார்வைகளும் 
நகைமுறுவலுமாய்
குறுஞ் செய்திகளின் 
ஊடே நிகழும்
உணர்வுகளின்
உற்சாகப் பிரவாகம்!


  

கவி


புனையும் 
என் கவிதைகள்
பொய்யும் அன்று
புனைச் சுருட்டும் அன்று
இன்னும் புலராத இருட்டு

கவிதாயினி!

குழந்தையுடன்
சைகையால் பேசுவதுபோல் களிப்பானது
காதலை
கவிதையால் 
சொல்வது!

காதல் மொழி!


அவள்
அழகானவளா 
என்பதறியேன்
ஆனால் 
அற்புதமானவள்!