எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, December 11, 2011
சமர்ப்பணம் ...
நீ உதிர்த்துச் செல்கிற
இந்த புன்னகைப் பூக்கள்
எனக்கானவை அல்ல
என்பது தெரிந்தே இருந்தும்
சேகரித்துக் கொள்ளுகிறேன் - என்றேனும்
நீ கண்ணீர் சிந்துகிற தருணங்களில்
உனது காலடியில் சமப்பிப்பதர்க்காய்!!!!!
No comments:
Post a Comment