எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, December 19, 2011
நறுமுகை ...
எனது விழித்திரை நிறைத்திடும்
உனது பிம்பங்களில்
நான் உள் நுழைகையில்
நெற்றி நெரித்து
இமை விரித்து,
இதழ் பிரித்து,
மெல்லிய புன் முறுவலுடன் .
அளித்துச் செல்கிறாய் - ஒரு
சிவப்புக் கம்பள வரவேற்பை ....
No comments:
Post a Comment