எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, October 10, 2011
கல்லறைப் பூக்கள்
உன்னிடம் கேட்கிறேன்
ஒரு புன்னகை,
கொஞ்சம் நட்பு,
ஏராளமாய் அன்பு,
எப்போதும் உடனிருப்பு,
இறந்து போகையில் இரு துளி கண்ணீர்
நீ தருகிறாய் !!!!!
ஒரு பார்வை,
கொஞ்சம் வார்த்தைகள்,
ஏராளமாய் பரிதவிப்பு,
எப்போதும் கண்ணீர்,
உறங்கிய கல்லறையில்
உலராத பூக்கள் !!!!!
No comments:
Post a Comment