Thursday, October 13, 2011

தேவதைக் காலங்கள்

நான் செய்த உதவிகளுக்காய் ,
என்ன வேண்டும் எனக் கேட்கிற  உன்னிடம்,
" இப்போதைக்கு ஒரு புன்னகை ,
   எப்போதும்  உன்  அன்பு ,
   இறந்து போகையில் இரு துளி கண்ணீர்"
  என்கிறேன் நான் .....
  கேட்டவுடன்  ஓடி விடுகிறாய் எப்போதும் போல்
உன் புன்னகையை  மறைத்து .....
தூரத்தில் நின்று
"நீ பேராசைப்படுகிறாய்   " வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கையில் ....
கேட்காமல் கிடைத்தது பொக்கிஷம் எனக்கு !!!...

No comments:

Post a Comment