எங்குமாய் ...எல்லாமாய்
என்னுளும் முற்றிலுமாய் ..
நீயே இயக்குகிறாய் ...இயங்குகிறாய் ...
பெரு வெடிப்பின் முதல் கணம்,
பிரளயத்தின் மௌன முகம் ...
எல்லாம் உனது அசைவுகளில் ..
புரிதலும் , தேடுதலும் தாண்டிய
மோன வெளிகள் உன் சஞ்சாரம் ...
அகண்ட பேரண்டம் ..பஞ்ச பூதங்கள்
இயற்கையின் எழில் யாவும் நீயே ...
உயிரியலின் தாயே!! ....
இன்ப ,துன்பங்கள்
வெற்றி,தோல்விகள்
எல்லாம் உனது ஓவியத்தின் கோடுகள் ...எனில் .
வரைந்து முடித்த நீயே ..
தூரிகையைத் தூக்கி எறிந்ததேனோ?
உயிரின் ரகசியம் ஒளித்து வைத்ததேனோ??
என்னுளும் முற்றிலுமாய் ..
நீயே இயக்குகிறாய் ...இயங்குகிறாய் ...
பெரு வெடிப்பின் முதல் கணம்,
பிரளயத்தின் மௌன முகம் ...
எல்லாம் உனது அசைவுகளில் ..
புரிதலும் , தேடுதலும் தாண்டிய
மோன வெளிகள் உன் சஞ்சாரம் ...
அகண்ட பேரண்டம் ..பஞ்ச பூதங்கள்
இயற்கையின் எழில் யாவும் நீயே ...
உயிரியலின் தாயே!! ....
இன்ப ,துன்பங்கள்
வெற்றி,தோல்விகள்
எல்லாம் உனது ஓவியத்தின் கோடுகள் ...எனில் .
வரைந்து முடித்த நீயே ..
தூரிகையைத் தூக்கி எறிந்ததேனோ?
உயிரின் ரகசியம் ஒளித்து வைத்ததேனோ??

No comments:
Post a Comment