எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, October 23, 2011
"வருகைப் பதிவு "
ஒரு புயலென கடந்து சென்று விடுகிறாய் ..
அந்த நொடிகளைச் சேகரித்து,
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
எனது நியூரான்களின் நீட்சிகளில் ... அந்த நொடிகளுக்கீடாய்
ஒரு புன்னகையோ ,
உயிர் உருக்கிடும் ஓர் பார்வையோ!
திருப்பித்தருவாய் என்பதற்காய்!!!!
No comments:
Post a Comment