ஆளரவமற்ற பின்னிரவு வேளைகளில்
திரையங்கின் மெல்லிய இருளில்,
தொலை தூரப் பேருந்தின் பின்னிருக்கைகளில்,
துரத்தியபடியே இருக்கின்றன சில விரல்கள்
துரியோதனன் பிளந்த இடத்தில் தாளமிடும் அவை
மெல்ல உள்நுழையும்
கொடிய தருணங்களில்
திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன்
தட தடக்கத் துவங்கிய இதயம்
இன்னும் வேகமாய் துடிதுடிக்கிறது .
உற்று நோக்கிடும் முகங்களும்,
நீல நாகம் குறித்த புறங்கையும்,
ஒற்றை கடுக்கன் தரித்த காதும்,
உயிர் கொண்ட உறவுகளும் அத்து மீறும்
நீள் நகம் கொண்ட இரவுகளும்,
நரகமாக்கும் வாழ்வை - கடந்து போகையில்
மடியமர்த்தப்படும் கைப்பை கொண்டு
கடந்து விடுகிறேன் -பேருந்துப் பயணங்களை..!
திடகாத்திர நண்பர்கள் துணையுடனே
சமாளிக்கிறேன்- திரையரங்க தருணங்களை!
சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிறேன்
இரவுகளின் வெளித் தங்கலை..!.
நிசப்தம் கிழித்து தடதடக்கிற
தொடர் வண்டியின் இரவுப் பயணங்களில்,
உறங்கும் வழிதான் புரிபடவில்லை !!!
திரையங்கின் மெல்லிய இருளில்,
தொலை தூரப் பேருந்தின் பின்னிருக்கைகளில்,
துரத்தியபடியே இருக்கின்றன சில விரல்கள்
துரியோதனன் பிளந்த இடத்தில் தாளமிடும் அவை
மெல்ல உள்நுழையும்
கொடிய தருணங்களில்
திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன்
தட தடக்கத் துவங்கிய இதயம்
இன்னும் வேகமாய் துடிதுடிக்கிறது .
உற்று நோக்கிடும் முகங்களும்,
நீல நாகம் குறித்த புறங்கையும்,
ஒற்றை கடுக்கன் தரித்த காதும்,
உயிர் கொண்ட உறவுகளும் அத்து மீறும்
நீள் நகம் கொண்ட இரவுகளும்,
நரகமாக்கும் வாழ்வை - கடந்து போகையில்
மடியமர்த்தப்படும் கைப்பை கொண்டு
கடந்து விடுகிறேன் -பேருந்துப் பயணங்களை..!
திடகாத்திர நண்பர்கள் துணையுடனே
சமாளிக்கிறேன்- திரையரங்க தருணங்களை!
சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிறேன்
இரவுகளின் வெளித் தங்கலை..!.
நிசப்தம் கிழித்து தடதடக்கிற
தொடர் வண்டியின் இரவுப் பயணங்களில்,
உறங்கும் வழிதான் புரிபடவில்லை !!!

kalakkss :) unmaiya nalla irukku
ReplyDeletethank u very much ...
ReplyDelete