Tuesday, February 14, 2012

பற (வா)..!

'பறவை' என்று விளிக்கப் பட்டேன்;
பறந்து காட்டப் பணிக்கப் பட்டேன்;
பறவையின் வாழ்வியல் அறிந்திலேன்;
பறத்தலின் விதிகளும் அறிந்திலேன்;
பறந்த கதை சொன்னவர்   
பரவலானோர்;
மறந்து போனதாய்
நழுவினர் வகையாய் ;
இன்னும்  சிலர் !

பறந்து காட்டுவோர் யாருமிலர் !
 

புரிந்ததை, புரிந்து கொள்ள
சொல்லுதல் ஏலுமோ ?
யான் பறப்பதும்
ஓர் நாள் நிகழுமோ ?

பிறந்ததால் மட்டுமே,

பறந்து போதல் ஆகுமோ ?
பறந்தவர் திரும்பிடில் ,
இயம்பிடில்;

பறத்தல் சாத்தியம் ,
இது சத்தியம் !!!

No comments:

Post a Comment