Tuesday, November 22, 2011

தமிழகமே! தமிழகமே !!

தமிழக மக்களுக்கு ஓர் அறிவிப்பு ! அடுத்த ஒரு வாரத்திற்கு பின் வரும் நிகழ்வுகள் , பகுதியாகவோ , மொத்தமாகவோ பாதிக்கும் வாய்ப்புண்டு. ...மக்கள் ஆங்காங்கே பத்திரமாக இருந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

1.கடந்த ஆட்சியில் அருங்காட்சியகத்திலிருந்து காணமல் போய் , பரிதவித்த கண்ணகி சிலை  மீட்கப்பட்டு , மீண்டும் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு , பத்திரமாக  வைக்கப்பட்டது .

2.கன்னியாகுமரியில் அதியசம் ..ஒரே இரவில் திருவள்ளுவர் சிலை மாயமாகி அந்த இடத்தில் இதய தெய்வத்தின் 150  அடி உயர சிலை எழுப்பப் பட்டிருந்தது

3.தமிழகத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப் பட்டிருக்கும் அறிவாலயங்கள் , பச்சை நிற பெயிண்ட் அடித்து , அன்னை ஆலயமாக மாற்றப்படாவிட்டால் , இடித்துத் தரைமட்டமாக்கப்படும் .

4.இனி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்   பச்சை நிற உடையே சீருடையாக்கப்படும். மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள்

5.இனி தமிழக மக்கள் அனைவரும்  'பச்சைத்  தண்ணீர், பச்சை பால்' மட்டுமே அருந்த வேண்டும் , மீறி காய்ச்ச நினைத்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் ..முட்டையையும், பச்சையாகவே குடிக்க வேண்டும் .


6.'பச்சைத் தமிழ்' பேசுகிற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப் படும் .

7.'பச்சைப்' பொய்யர்கள் தகுதிக்கேற்ப கலைமாமணி விருதுக்குத் தேர்தெடுக்கப்படுவார்கள்.



 

1 comment:

  1. tamizh naatu makkalukku migavum avaiyam.
    about you:REALLY GREATE.

    ReplyDelete