Monday, October 14, 2013

'சுழலும்' வாழ்வு!


கண்கள் கசக்கி
சோம்பல் முறித்தால்
காதில் ஒலிக்கிறது
வீடு மனை விற்கும்
சின்னத்திரை நாயகியின் குரல்!

அடித்து ஓய்ந்த அலாரத்தை
 தலையில் தட்டி குளியலறை உள் நுழைகிறேன்
அலுவலகம் அடைகையில்
ஐந்து நிமிடம் லேட்!

விஷமப் புன்னகையுடன் மேலதிகாரி
அப்புறம் வந்து பாரு என்கிறார்
உறுதியாய் ஒரு சில்லறை வேலை
இன்று மார்க்கெட்டோ, ஸ்கூலோ

பிறகுதான் உறைத்தது
ப்ரேக் பாஸ்ட்சாப்பிடாதது
 கேண்டீனில் வடை, சமோசா
இரைப்பை கதறத் திணித்து
ஜலசமாதி செய்கிறேன்

லஞ்சில் பிரியாணியும் , சிக்கனும் உள்நுழைத்து'
இம்முறை கோக கோலா!
பரபரப்பாய் அலுவலக வேலையில்
இடையில் மூன்று , நான்கு தேநீர்
உள் சென்றிருக்கலாம்
நினைவிலில்லை சரியாய்!

மாலையில் சகாக்களுடன்
அரட்டை வித் சீஸ் பர்கர்!

மாலை திரும்பவும் அதே புகை, வாகனங்கள்

இரவில் அம்மா தந்த இட்லியை
வேணாமென மறுத்து,
பாலைப் பருகி
முகநூலை நள்ளிரவு வரை மேய்ந்து
அலாரம் வைத்து
படுக்கையில் விழுகிறேன்!

வயிற்றிலும்,
மனதிலும்
அமில உணர்வு!




No comments:

Post a Comment